This Article is From Jul 31, 2020

ஆந்திராவில் போதைக்காக சானிடைசரை குடித்த 9 பேர் பரிதாப பலி!

சானிடைசர் உட்கொண்ட 6 பேர் இன்று காலை இறந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திராவில் போதைக்காக சானிடைசரை குடித்த 9 பேர் பரிதாப பலி!

சானிடைசரை குளிர்பானம், தண்ணீர் தவிர வேறு ஏதாவதுடன் மிக்ஸ் செய்துள்ளார்களா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Amaravati:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 16.38 லட்சத்தினை கடந்துள்ள நிலையில் ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் இன்று கிருமிநாசினியான சானிடைசர் குடித்ததால் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

“மக்கள் கடந்த சில நாட்களாக சானிடைசரை தண்ணீர் மற்றும் குளிர்பானங்களுடன் கலந்து குடித்து வருகிறார்கள் என்றும், அவர்கள் சானிடைசரை வேறு எந்த நச்சுப் பொருட்களுடன் இணைத்திருக்கிறார்களா என்பதையும் நாங்கள் விசாரித்து வருகிறோம்.” என பிரகாசம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் கவுஷல் கூறியுள்ளார்.

கடந்த பத்து நாட்களாக இந்த மக்கள் சானிடைசரை உட்கொண்டு வருவதாக அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கூறுகிறார்கள். தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பிரகாசம் மாவட்டத்தில் குரிச்செடு ஊரடங்கு நிலையில் உள்ளது, எனவே, கடந்த சில நாட்களாக மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன.

குடிகாரர்கள் சட்டவிரோதமாக வடிகட்டப்பட்ட அராக் தவிர, ஆல்கஹால் கொண்ட சானிடிசர்களை உட்கொள்வதாகக் கூறப்பட்டது.

இதுபோன்ற சம்பவத்தால் முதலில் ஒரு கோவிலுக்கு அருகிலுள்ள இரண்டு பிச்சைக்காரர்கள் நேற்று இரவு பலியானார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்த நிலையில், மற்றொருவர் தர்சி நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இறந்தார்.

நேற்று இரவு மயக்கமடைந்த நிலையில் மூன்றாவது நபர் தர்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சானிடைசர் உட்கொண்ட 6 பேர் இன்று காலை இறந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

.