This Article is From Jan 15, 2020

Nirbhaya Case: குற்றவாளிகளுக்கு ஜனவரி 22-ல் தூக்குத் தண்டனை கிடையாது: டெல்லி அரசு வாதம்!

Nirbhaya Case: முகேஷ் சிங் உள்ளிட்ட 4 குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ஜனவரி 22-ம் தேதி நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Nirbhaya Case: குற்றவாளிகளுக்கு ஜனவரி 22-ல் தூக்குத் தண்டனை கிடையாது: டெல்லி அரசு வாதம்!

Nirbhaya Case: முகேஷ் சிங் தற்போது, குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்.

New Delhi:

Nirbhaya Case: நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு வரும் ஜனவரி 22 ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில், டெல்லி அரசு, “ஜனவரி 22-ல் தண்டனை நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை,” என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் வரும் ஜன 22 ஆம் தேதி தூக்குத் தண்டனை பெற உள்ள நிலையில், அவர்களில் ஒருவரான முகேஷ் சிங் கருணை கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த மனுவைக் காரணமாக சொல்லித்தான் தூக்குத் தண்டனையை தற்போதைக்கு நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று டெல்லி அரசும் மத்திய அரசும் தெரிவித்துள்ளன.

திகார் சிறை சார்பில், டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் ராகுல் மேஹ்ரா, ‘தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னர், கருணை மனு குறித்தான ஜனாதிபதியின் பதிலுக்குக் காத்திருக்க வேண்டும். அதேபோல கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னரும், குற்றவாளிகளுக்கு 14 நாட்கள் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். ஜனாதிபதி, கருணை மனுவை நிராகரித்த பின்னர்தான் தண்டனையை நடைமுறைப்படுத்த முடியும்,' என்று நீதிபதிகள் மன்மோகன் மற்றும் சங்கித் திங்கரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வில் வாதம் வைத்தார்.

கருணை மனுவுக்கு முன்னர், உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, குற்றவாளிகள் வினய் ஷர்மா மற்றும் முகேஷ் ஆகியோர், தூக்குத் தண்டனை குறித்தான மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தனர். அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, முகேஷ் சிங் தற்போது, குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். முகேஷ் சிங் உள்ளிட்ட 4 குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ஜனவரி 22-ம் தேதி நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் 16 ஆம் தேதியன்று, மருத்துவ மாணவி நிர்பயா, ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட அவர், ஓடும் பேருந்திலிருந்து கீழே தள்ளி விடப்பட்டார். இந்த சம்பவத்தை 6 பேர் செய்தனர். மருத்துவமனையில் படு காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி அந்த மாதமே உயிரிழந்தார். 

குற்றவாளிகளில் ஒருவர் சிறுவனாக இருந்தான். 18 வயதுக்கு உட்பட்ட அவன், சீர்திருத்தப் பள்ளியில் 3 ஆண்டுகள் அனுமதிக்கப்பட்டிருந்தான். பின்னர் அவன் விடுதலை செய்யப்பட்டான். மற்றொரு குற்றவாளி ராம் சிங், சிறைச்சாலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தற்போது மீதம் உள்ள 4 பேர் தூக்குத் தண்டனையை எதிர்கொள்ள உள்ளனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் மறு சீராய்வு மனுக்களை பலமுறை தொடர்ந்தனர். அவற்றை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
 

.