Read in English
This Article is From Nov 17, 2018

விபத்தில் காயமடைந்தவரை காப்பாற்றிய கான்ஸ்டபிள் - குவியும் பாராட்டுகள்

உத்தர பிரதேசத்தில் உள்ள சீத்தாபூரில் கடந்த‌ வியாழ அன்று ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார்

Advertisement
நகரங்கள்
Sitapur:

உத்தர பிரதேசத்தில் உள்ள சீத்தாபூரில் கடந்த‌ வியாழ அன்று ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். விபத்தில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பிய அப்பெரியவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வரத் தாமதமானதால், அங்கிருந்த போலீஸ் கான்ஸடபிள் ஒருவர் சற்றும் தயங்காமல் அப்பெரியவரை தனது காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.

இந்நிலையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்த சம்பவம் கபில் ஷர்மா என்ற அந்த கான்ஸ்டபிளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன‌.

“உங்களை காணும் பொழுது பெருமையாக இருக்கிறது”, “ஜெய் ஹிந்த்” என பல கமென்டுகள் சீதாபூர் போலீஸின் ட்விட்டர் பக்கத்தில் குவிந்தன.

இதற்கு முன்னர் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரின் வீல்ச்சாரை பழுது பார்த்தத‌ற்காக‌ ஐதராபாத்தை சேர்ந்த தன்ராஜ் கே என்னும் போலீசார்க்கு பாராட்டுக்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement