Read in English
This Article is From Aug 24, 2020

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றமில்லை: மருத்துவமனை தகவல்!

பிரணாப் முகர்ஜிக்கு முளையில் ஏற்பட்ட இரத்த உறைவு காரணமாக அறுவை சகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement
இந்தியா

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றமில்லை: மருத்துமவனை தகவல்!

New Delhi:

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றமில்லை, அவர் தொடர்ந்து கோமா நிலையில் இருப்பதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. 

84 வயதான பிரணாப் முகர்ஜிக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் கூறும்போது, பிரணாப் முகர்ஜிக்கு சுவாச நோய்தொற்றுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், அவரது முக்கிய அளவுருக்கள் சீராக உள்ளதாகவும், தொடர்ந்து அவர் வென்டிலேர்டர் ஆதரவுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

பிரணாப் முகர்ஜி கடந்த ஆக.10ம் தேதி டெல்லி கன்டோன்மென்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரணாப் முகர்ஜியின் இன்று காலை வரை எந்த முன்னேற்றமும் இல்லை. அவர் ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளார். சுவாச தொற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது முக்கிய அளவுருக்கள் சீராக உள்ளன. தொடர்ந்து வென்டிலேட்டர் ஆதரவில் இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

பிரணாப் முகர்ஜிக்கு முளையில் ஏற்பட்ட இரத்த உறைவு காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயம் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு சுவாச நோய்த்தொற்றும் ஏற்பட்டது. 

பிரணாப் முகர்ஜி 2012 முதல் 2017 வரை இந்தியாவின் 13வது குடியரசுத்தலைவராக பதவி வகித்தார். 

Advertisement
Advertisement