This Article is From May 31, 2018

ஏர்செல்-மாக்சிஸ் பண மோசடி: ஜூன் 5 வரை ப. சிதம்பரம் மீது நடவடிக்கை இல்லை

காங்கிரஸ் ஆட்சியின் போது நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம், 2006 ஆம் ஆண்டில் ஏர்செல்-மாக்சிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டு அனுமதிப்பத்திரத்தை இயக்குநரகம் விசாரணை செய்து வருகிறது. 

ஹைலைட்ஸ்

  • ஏர்செல்-மாக்சிஸ் வழக்கில் சிதம்பரம் முன் ஜாமீன் மனு
  • ஜூன் 5 வரை சிதம்பரம் மீது எந்த நடவடிக்கையும் இல்லை - நீதிமன்றம்
  • இயக்குநரகம் வெளிநாட்டு முதலீட்டு அனுமதிகளை ஆய்வு செய்கிறது
New Delhi: ஏர்செல்-மாக்சிஸ் பண மோசடி வழக்கில் முன்னாள் யூனியன் அமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்தில் இருந்து முன் ஜாமின் பெற்றுள்ளார். இந்த மோசடியின் முக்கிய குற்றவாளி சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் என்பதால் ஜூன் 5 நடக்கவிற்கும் நீதி மன்ற விசாரணை வரை சிதம்பரத்தின் மேஈது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

காங்கிரஸின் மூத்த தலைவரை நீதி மன்ற விசாரணைக்கு ஆஜராக வேண்டும். முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த தலைவருமான கபில் சிபலும் ஆஜராக உத்தரவு. 

காங்கிரஸ் ஆட்சியின் போது நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம், 2006 ஆம் ஆண்டில் ஏர்செல்-மாக்சிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டு அனுமதிப்பத்திரத்தை இயக்குநரகம் விசாரணை செய்து வருகிறது. 

சிபிஐ குற்றச்சாட்டின் படி, மோரிஷியஸ் நிறுவனமான  Global Communications Services Holding ஏர்செல்லில் 800 மில்லியன் டாலர் முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமரின் தலைமையிலான அமைச்சரவை குழு இந்த ஒப்பந்தத்தை அழித்திருந்தாலும், அந்த நேரத்தில் நிதி அமைச்சர் சிதம்பரம் தான்  ஒப்புதல் அளித்தார்.

வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் அளித்த பிறகு கார்த்தி சிதம்பரம் நிறுவனத்திற்கு ஏர்செல்  நிறுவனம் 26 லட்சம் ரூபாய் செலுத்தியதாக சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது.
.