Read in English
This Article is From Mar 13, 2020

''NPR-க்கு ஆவணங்கள் தேவையில்லை; சந்தேக பட்டியலில் யாரும் இடம்பெற மாட்டார்கள்'' : அமித் ஷா

'உங்களுக்குத் தெரிந்த கேள்விக்கு விடையளிக்கலாம். தெரியாதவற்றை விட்டு விடலாம் ' என்று மாநிலங்களவையில் அமித் ஷா இன்று தெரிவித்தார்.

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

'என்.பி.ஆருக்கு ஆவணங்கள் ஏதும் தேவையில்லை. சந்தேகத்திற்கு இடமானோர் பட்டியலில் யாரும் இடம்பெற மாட்டார்கள்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் இன்று தெரிவித்துள்ளார். 

மாநிலங்களவையில் அவர் பேசியதாவது-

என்.பி.ஆர். கணக்கெடுப்பு நடத்தப்படும்போது ஆவணங்கள் ஏதும் மக்கள் அளிக்கத் தேவையில்லை. உங்களிடம் எந்த தகவல் இருக்கிறதோ அதை அளித்தால் மட்டும் போதும். தெரியாத கேள்விகளை நீங்கள் விட்டு விடலாம். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். அமித் ஷா பேசியபோது, சந்தேகத்திற்குரியவர்கள் என்பதைக் குறிக்கும் D (Doubtful) என்ற குறியீடு, ஆவணங்கள் அளிக்காதவர்கள் மீது இடப்படுமா என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். 

Advertisement

இதற்குப் பதில் அளித்த அமித் ஷா, 'சந்தேகத்திற்கிடமானோர் (Doubtful) என்ற பிரிவு என்.பி.ஆரில் இடம்பெறாது. யாரும் அந்தப் பட்டியலில் இடம்பெற மாட்டார்கள்' என்று கூறினார். 

Advertisement