Read in English
This Article is From Jul 25, 2019

கர்நாடகாவில் புதிய ஆட்சி அமைவதில் தாமதம்! அமித்ஷா முடிவுக்கு காத்திருக்கும் தலைவர்கள்!

இதில், குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் பதிவானது, 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

Advertisement
Karnataka Edited by
Bengaluru:

கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்-மஜத கூட்டணி தோல்வியுற்ற நிலையில், அங்கு ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பாஜக தலைமையிலான புதிய ஆட்சி அமைய உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்று தந்ததை தொடர்ந்து, அவர் விரைவில் ஆளுநரை சந்திப்பார் என்று கூறப்படுகிறது. 

எனினும், இந்த பாஜக தலைமையிலான புதிய ஆட்சி அமைக்க தாமதமாகி வருகிறது. இது குறித்து எடியூரப்பா கூறும்போது, கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோருவது குறித்து கட்சித் தலைமையின் உத்தரவை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்தார். 

மேலிட உத்தரவு வந்தவுடன் சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் பின்னர் ஆளுநரிடம் சென்று ஆட்சியமைக்க உரிமை கோரப்படும் என்றும் எடியூரப்பா தெரிவித்திருந்தார்.

Advertisement

ஏற்கனவே எடியூரப்பா 3 முறை முதல்வராக இருந்திருக்கிறார். தற்போது அவர் 4-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, பெங்களூருவுக்கு சென்ற எடியூரப்பா அங்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

கர்நாடக மாநிலத்தில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி குமாரசாமி தலைமையில் நடந்தது. கூட்டணிக் கட்சியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் கடந்த ஒன்றாம் தேதி முதல் ஒருவர் பின் ஒருவராக தங்களது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர். 

Advertisement

மேலும் 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் கூட்டணிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றுக்கொண்டு பாஜவுக்கு ஆதரவளிப்பதாக ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரின் ராஜினாமா கடிதம் மீதும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்காமல் வைத்திருந்தார்.  

இதனால் கூட்டணி அரசுக்கு இருந்த பெரும்பான்மை 117லிருந்து 101 ஆக குறைந்தது. இதையடுத்து 105 எம்எல்ஏக்கள் கொண்ட எதிர்க்கட்சியான பாஜக குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். 

Advertisement

இதைத்தொடர்ந்து, கடந்த 18ஆம் தேதி சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் அறிவித்தார். பின்னர். கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 4 நாட்களாக நடந்த வாதத்திற்கு பிறகு நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. 

இதில், குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் பதிவானது, 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. 
 

Advertisement