Read in English
This Article is From Aug 20, 2019

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுப்பு!

இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

Advertisement
இந்தியா Edited by

அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

New Delhi:

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக கார்த்தி சிதம்பரம் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார் ப.சிதம்பரம். அவரது முன் ஜாமீனுக்கு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரை கைது செய்து விசாரிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் இரு அமைப்புகளும் தெரிவித்துள்ளன. அதைத் தொடர்ந்துதான் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement