This Article is From Sep 10, 2018

பாரத் பந்த்: தமிழகத்தில் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பில்லை!

காங்கிரஸ் கட்சித் தலைமையில் இன்று தேசிய அளவில் பாரத் பந்த் நடந்து வருகிறது

Advertisement
இந்தியா Posted by

காங்கிரஸ் கட்சித் தலைமையில் இன்று தேசிய அளவில் பாரத் பந்த் நடந்து வருகிறது. இதற்கு தமிழக எதிர்கட்சியான திமுக ஆதரவு தெரிவித்திருந்த போதும், அன்றாட வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை.

தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் என அனைத்தும் இன்று வழக்கம் போலவே இயங்குகின்றன. அதே நேரத்தில் பொதுப் போக்குவரத்துக்கான பேருந்துகள் சற்று குறைவாகவே இயங்குகின்றன.

புறநகர் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. நாகர்கோயில், மன்னார்குடி, திருவாரூர் போன்ற இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

தமிழக அளவில் பேருந்துகள் சீராக இயங்கி வந்தாலும், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு பேருந்துகள் செல்லவில்லை. இந்த இரு மாநிலங்களிலும் ஸ்டிரைகிற்கு பெரும் ஆதரவு வந்துள்ளதால் இந்த நிலைமை என்று கூறப்படுகிறது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement