हिंदी में पढ़ें Read in English বাংলায় পড়ুন
This Article is From May 15, 2019

பாஜக நிர்வாகியை நேற்றே விடுவிக்க கோரிய நிலையில், ஏன் தாமதம்? உச்சநீதிமன்றம் கேள்வி

பாஜக நிர்வாகி பிரியங்கா சர்மாவை நேற்றே விடுவிக்க கோரிய நிலையில், எதற்காக மற்றொரு இரவு அவர் சிறை வைக்கப்பட்டார் என மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

இன்று காலை 9.30 மணி அளவில் அவர் விடுவிக்கப்பட்டார் என மேற்குவங்க அரசு தெரிவித்தது.

New Delhi:

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கேலி செய்து பதிவிட்ட, பாஜக நிர்வாகி பிரியங்கா சர்மாவை பிணையில் விடுவிக்க கோரியும் எதற்காக மற்றொரு இரவு அவரை சிறை வைத்தீர்கள் என மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த கைது நடவடிக்கையானது தனிச்சையான நடவடிக்கையாக தெரிகிறது. பிரியங்கா விடுவிக்கப்படவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேற்குவங்கம் மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை கேலி செய்யும் விதமாக அவரது புகைப்படத்தை, அமெரிக்காவில் நடைபெற்ற மெட்காலா நிகழ்வில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்துடன் மார்பிங் செய்து பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகவும் பரவி வருகிறது.

Advertisement

இந்த புகைப்படத்தை வெளியிட்டதாக பாஜக இளைஞரணியான யுவ மோர்ச்சாவை சேர்ந்த ஹவுரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா சர்மா என்ற பெண்ணை போலீசார் கடந்த வெள்ளியன்று கைது செய்து காவலில் அடைத்தனர்.

இதைத்தொடர்ந்து, அவரை பிணையில் விடுவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், பாஜக நிர்வாகி பிரியங்கா சர்மாவுக்கு உச்சீநிதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

Advertisement

மேலும், மன்னிப்பு கோருவதில் எதுவும் சிரமம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியது. மற்றவர்களின் உரிமையை பாதிக்கும் போது, பேச்சு சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரியங்கா இன்று காலை 9.40 மணி அளவில் விடுவிக்கப்பட்டார் என மூத்த வழக்கறிஞர் நீராஜ் கிசான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, நேற்றே அவரை விடுவிக்க உத்தரவிட்ட நிலையில் ஏன் இன்று காலை வரை தாமதமானது என மேற்குவங்க அரசு வழக்கறிஞரிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

Advertisement

உச்சநீதிமன்றம் அவரை உடனடியாக விடுவிக்கும் படி உத்தரவிட்டாலும், தலைமை நீதிபதியின் ஆணையை சிறை கண்காணிப்பாளர் கோரினார் என்று கூறியுள்ளார். மேலும், உச்சநீதிமன்றம் உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டும் அவர் 24 மணி நேரம் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இது நீதிமன்ற அவமதிப்பாகும். அவர் விடுதலைக்கு முன்பாகவே மன்னிப்பு கடிதம் வழங்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார் என சர்மாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த கைது நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த பிரியங்கா சர்மாவின் தாயார், அனைவரையும்போல் என் மகளும் இதை ஷேர் செய்துள்ளார். ஆனால், அவர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர் என்பதால் அரசியல் நோக்கத்துடன் போலீசார் அவரை கைது செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement