This Article is From Oct 02, 2018

வயலின் இசைக் கலைஞர் பாலபாஸ்கர் காலமானார்!

பாலபாஸ்கரின் குழந்தை இறந்தது. தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி இறந்தார்

வயலின் இசைக் கலைஞர் பாலபாஸ்கர் காலமானார்!

திருச்சூரிலிருந்து வந்து கொண்டிருந்த போது தான் கார் விபத்து நடந்துள்ளது

Thiruvananthapuram:

கேரளாவைச் சேர்ந்த பிரபல வயலின் இசைக் கலைஞர் பாலபாஸ்கர் காலமானார். கடந்த வாரம் பாலபாஸ்கர், தன் குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்த போது, விபத்து நடந்தது. இதில் பாலபாஸ்கரின் குழந்தை இறந்தது. தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.

நெஞ்சு வலி காரணமாக இன்று அதிகாலை 1 மணி அளவில் அவர் மறைந்தார் என்று மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.
 

0unl3pm

பாலபாஸ்கர், அவரின் கச்சேரிகளுக்காக மிகவும் அறியப்பட்டவர்.

விபத்தின் போது காயமடைந்த பாலபாஸ்கரின் மனைவி மற்றும் கார் ஓட்டுநர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பாலபாஸ்கரின் மகள் தேஜஸ்வினி பாலா, பிறந்ததற்காக திருச்சூரில் இருக்கும் கோயிலுக்கு நன்றி கடன் செலுத்த அவரின் குடும்பம் சென்றுள்ளது. நன்றிக் கடன் செலுத்திவிட்டு அவர்கள் திரும்பும் போது, கார் சாலை ஓரத்திலிருந்த ஒரு மரத்தில் மோதியுள்ளது.
 

6n08kt2g

திருமணம் ஆகி, 15 ஆண்டுகள் கழித்து தான் பாலபாஸ்கருக்கும் அவரது மனைவிக்கும் குழந்தை பிறந்தது

திருவனந்தபுரத்துக்கு அருகில் தான் விபத்து நடந்துள்ளது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது தேஜஸ்வினி இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலபாஸ்கருக்கு பலகட்ட அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டார்.

.