திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் நுஸ்ரத் ஜஹான் பகிர்ந்த மூன்று புகைப்படங்கள் இணையவாசிகளின் மனதில் இடம் பிடித்துவிட்டது. புகைப்படத்தில் பெரிய சிரிப்புடன் ஒன்றரை வயதான சிறுவனை கட்டிபிடித்து முத்தமிடுகிற புகைப்படங்களை இண்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அவரின் பதிவு 24,000க்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளன.
“என் வார இறுதி நாளை சிறப்பாக்கி விட்டது… பலூன்களை விற்கும் ஒன்றரை வயது குழந்தை… பலூன்களை விற்றது மிகவும் அழகாகவும் வண்ணமயமாகவும் இருந்தது” என்று கூறி #loveforall, #loveistheonlylanguage என்ற ஹேஷ் டேக்கினை சேர்த்துள்ளார்.
இண்ஸ்டாகிராம் பதிவர் “உங்களின் அன்பான மனதை பாராட்டுகிறேன். அன்பான இதயம் உள்ளது” என்று கமெண்ட் செய்துள்ளார்.
மற்றொருவர் “ கடவுள் ஆசிர்வதிப்பார்…நீங்கள் ஒரு நல்ல நபர்… நான் உங்களின் ரசிகர்” என்று எழுதியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டு நுஸ்ரத் ஜஹான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையிலிருந்து திரும்பியவர் தனது நலம் விரும்பிகளுக்கு நன்றி வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் மேற்கு வங்கத்தின் பசிர்ஹாட் தொகுதியில் வென்றார்.