Read in English
This Article is From Sep 24, 2019

இன்று ஒடிஸா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பலத்த மழை - வானிலை ஆய்வு மையம்

இன்று ஒடிஸா, தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

Advertisement
இந்தியா

அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் (File image)

New Delhi:

ஒடிஸா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் இன்று அதிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

உத்தர பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், விதர்பா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் நாள் முழுவதும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை முன்னறிவிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

“அசாம், மேகாலயா, மகாராஷ்டிரா, மஹாராஷ்டிரா, கொங்கன், கோவா, ஆந்திரா மற்றும் ஏனாம், தெலுங்கானா போன்ற உள் மாவட்டங்களில் அதிக மழை பெய்யக்கூடும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பீகார், ஜார்கண்ட் மற்றும் கங்கை மேற்கு வங்காளத்தில் மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

Advertisement

வடகிழக்கு மற்றும் கிழக்கு மத்திய அரேபிய கடலில் 55-65 கி.மீ வேகத்தில் காற்றடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்குள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement