அமெரிக்காவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களின் படகுக்குள் சுறாமீன் ஒன்று பாய முயன்றது. அப்போது சிறுவன் ஒருவன் அதிர்ஷ்டவசமாக தாக்குதலில் இருந்து தப்பியுள்ளான்.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் உள்ள கேப் கோட் வளைகுடா பகுதியில் ஒரு குடும்பத்தினர் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது வலையில் மீன் ஒன்று சிக்கியது.
இதையடுத்து அதனை மெதுவாக முதியவர் ஒருவர் இழுத்துக் கொண்டிருந்தார். அதனை அருகில் இருந்த சிறுவன் படம் பிடித்துக் கொண்டிருந்தான். அப்போது வேகமாக வந்த சுறா மீன் ஒன்று, தூண்டிலிலில் சிக்கிய மீனைப் பிடித்ததோடு, படகிலும் பாய முயன்றது.
அதற்குள்ளாக சிறுவன் சுதாரித்ததால், சுறாவின் தாக்குதலில் இருந்து சிறுவன் தப்பினான். இந்த வீடியோ வலைதளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
COMMENTS
Advertisement