বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Oct 09, 2019

உ.பியில் 8 மாத குழந்தையை கடத்திய சம்பவம் : அதிர்ச்சியூட்டும் வீடியோ பதிவுகள்

குழந்தையை கடத்திய ஒரு இளைஞனும் ஒருபெண்ணும் தாயார் ராணியை அணுகி அவர்களுடன் பேசத் தொடங்கியுள்ளனர். ராணியை நம்பிக்கையுடன் அழைத்துச் சென்று குழந்தைக்கு ஒரு போர்வை மற்றும் மருந்துகளை வழங்கியுள்ளனர்.

Advertisement
இந்தியா Edited by

மொராதாபாத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் 8 மாத குழந்தை கடத்தப்பட்டது.

Moradabad:

உத்தர பிரதேசத்தின் மொராதாபாத்தில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் தனது தாயின் அருகில் உறங்கிக் கொண்டிருந்த எட்டு மாத குழந்தையை கடத்திச் செல்லும் காட்சி சிசிடிவிகளில் பதிவாகியுள்ளது. 

திங்கள் கிழமை நடந்த இந்த சம்பவத்தை காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. 

காவல்துறை அதிகாரி மிட்டல், “குழந்தை கடத்தப்பட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்த சிசிடிவி காட்சி மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர். குழந்தையினை கடத்தி செல்லும் இருவரும்  தாயார் ராணியுடன் சில நாட்கள் நட்பாக பழகி வந்துள்ளதாக தெரிகிறது.” என்று தெரிவித்தார். 

Advertisement

குழந்தையை கடத்திய ஒரு இளைஞனும்  ஒருபெண்ணும் தாயார் ராணியை அணுகி அவர்களுடன் பேசத் தொடங்கியுள்ளனர். ராணியை நம்பிக்கையுடன் அழைத்துச் சென்று தனது குழந்தைக்கு ஒரு போர்வை மற்றும் மருந்துகளை வழங்கியுள்ளனர்.

“என்னுடன் பேசியபின் பஸ் ஸ்டாண்டிற்கு அழைத்து வந்தனர். இரவில் குற்றம் சாட்டப்பட்டவர் பஸ் ஸ்டாண்டில் பெஞ்சில் படுத்துக் கொண்டார். நானும் அங்கேயே தூங்கினேன். காலை 12:00 மணியளவில் அவர்கள் என்னைக் கடத்திச் சென்றனர். நான் தூங்கிக் கொண்டிருந்த போது குழந்தையை கடத்திச் சென்று விட்டனர். உடனடியாக கால்ஷாஹீத் காவல் நிலையத்திற்கு  சம்பவம் குறித்து தகவல் கொடுத்தேன்” என்று ராணி தெரிவித்தார்.

Advertisement

Advertisement