हिंदी में पढ़ें বাংলায় পড়ুন Read in English
This Article is From Sep 18, 2019

பஞ்சாப்பில் குழந்தையைக் கடத்தும் போது பிடிபட்ட திருடன் - அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்

உள்ளூர் வாசிகள் தப்பிக்க முயன்ற நபரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

Advertisement
இந்தியா Posted by (with inputs from ANI)

Highlights

  • குழந்தையை தூக்கி வண்டியில் வைக்க முற்படும் போது பிடிபட்டார்.
  • குழந்தையின் தாய் எழுந்து குழந்தையை மீட்டார்.
  • குழந்தையை கடத்தியதற்கான காரணம் ஏதும் தெரியவில்லை.
Ludhiana, Punjab:

பஞ்சாப்பில் சாலையில் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடத்த முயன்ற நபர் கையும் களவுமாக பிடிபட்டார். 

இந்த  கடத்தல் காட்சி அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து ஏ.என்.ஐ வெளியிட்ட  செய்தியில் பஞ்சாப்பின் லூதியானாவில் உள்ள ரிஷி நகரில் தங்கள் வீட்டுக்கு முன் குழந்தைகளுடன் குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருக்க ஒரு நபர் சைக்கிள் ரிக்‌ஷா ஒன்றை மெதுவாகத் தள்ளிக் கொண்டு நிறுத்தி  குழந்தையைக் கடத்திக் கொண்டு வந்து அதில் வைக்க முற்படும் போது தாயார் சுதாரித்து கொண்டு எழுந்து குழந்தையை காப்பாற்றுகிறார். 

உள்ளூர் வாசிகள் தப்பிக்க முயன்ற நபரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். 

Advertisement

இது குறித்து விசாரணை நடந்து  வருவதாக கா காவல்துறை தெரிவித்துள்ளது. 

(With inputs from ANI)

Advertisement
Advertisement