This Article is From Oct 11, 2019

காலை தலையில் வைத்து ஆசிர்வாதம் செய்யும் பூசாரி -ஒடிசாவில் விநோதம்

கோவில் பூசாரி ஒருவர் தன் காலை பக்தர்களின் தலையில் வைத்து ஆசிர்வாதம் செய்கிறார்.

காலை தலையில் வைத்து ஆசிர்வாதம் செய்யும் பூசாரி -ஒடிசாவில் விநோதம்

பூசாரி ஒருவர் பக்தர்களை தன்னுடைய காலினால் ஆசிர்வாதம் செய்கிறார்.

Khorda (Odisha):

ஒடிசாவில் கோர்டா மாவட்டத்தில் உள்ள பான்பூர் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோவில் கோயில் பூசாரி ஒருவர் பக்தர்களை தன்னுடைய காலினால் ஆசிர்வாதம் செய்கிறார். 

ஏ.என்.ஐ பகிர்ந்த வீடியோவில் கோவில் பூசாரி ஒருவர் தன் காலை பக்தர்களின் தலையில் வைத்து ஆசிர்வாதம் செய்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பல்வேறு விமர்சனங்களைப் பெற்றுள்ளது. 

“பைத்தியம் பிடித்தவர்கள் பைத்தியம் பிடித்த பூசாரியிடம் ஆசிர்வாதம்  பெறுகிறார்கள்” என்று கமெண்ட் செய்துள்ளனர். சிலர் மூடநம்பிக்கை குறித்து கேள்விஎழுப்பியுள்ளனர். 

"இந்த வகையான தீவிர குருட்டு நம்பிக்கையை இந்தியா தடை செய்ய வேண்டும் .. இது உலகிற்கு இந்தியாவின் மோசமான பிம்பத்தை முன்வைக்கிறது .." என்று கூறியிருந்தார்.

.