This Article is From Apr 08, 2019

‘இந்தியாவை ஒரே திசையில் இட்டுச் செல்வேன்!’- தேர்தல் அறிக்கை வெளியிட்டு மோடி பேச்சு

'130 கோடி மக்களின் கனவுகளை நினைவாக்க எங்களின் சங்கல்ப் பத்ரா (தேர்தல் அறிக்கை) உதவும்'

'தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து விரைவாக ராமர் கோயில் கட்ட முயற்சி'

New Delhi:

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இன்று பாஜக-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. ‘தீவிரவாதத்தை ஒடுக்கி நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருப்பது, ஜம்மூ - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்குவது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது' உள்ளிட்டவைகள் பாஜக அறிக்கையில் முக்கிய அம்சங்களாக இருந்தன. 

தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியின்போது பேசிய பிரதமர் மோடி, ‘தேசியவாதம் என்பது எங்களின் இலக்கு. நலிவடைந்த சமூகத்தினரை உயர்த்துவது எங்களின் நோக்கம். சிறப்பான அரசு என்பது எங்களின் மந்திரம். இந்தியாவை ஒரு இலக்கை நோக்கி, ஒரே திசையில் இட்டுச் செல்வேன்' என்று பேசினார். 

அவர் மேலும் பேசுகையில், ‘கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி நடத்த ஒத்துழைப்பு கொடுத்தமைக்கு நன்றி. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு தேர்தல் அறிக்கை கொண்டு வருவது சாதாரணம்தான். ஆனால், ராஜ்நாத் ஜி இந்த அறிக்கையை கொண்டு வருவதற்கு 2 முதல் 3 மாதங்கள் எடுத்துக் கொண்டார். 

ஊழலை ஒழிப்பதில் நாங்கள் பெருமளவு வெற்றி கண்டுள்ளோம். அதற்கு தொழில்நுட்பம் எங்களுக்கு அதிகமாக உதவியது. வடக்கு மற்றும் தென்னிந்தியாவுக்கு இடையில் இருந்த பல்வேறு இடைவெளிகளைப் போக்க நாங்கள் நிறைய நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்' என்றார். 

தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது, பாஜக தலைவர் அமித்ஷா பேசுகையில், ‘கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையில் மிகவும் ஸ்திரமான ஓர் அரசாங்கத்தை நாங்கள் வழங்கியுள்ளோம். நமது நாடு இன்று உலகின் முக்கிய இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் இன்று மின்சாரம் உள்ளது. 8 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 7 கோடி குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது, 50 கோடி மக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது' என்றார். 

அவரைத் தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள நாங்கள் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தினோம்.130 கோடி மக்களின் கனவுகளை நினைவாக்க எங்களின் சங்கல்ப் பத்ரா (தேர்தல் அறிக்கை) உதவும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ராமர் கோயில் கட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்போம். நமது ராணுவத்துக்கு நவீன ஆயுதங்கள் வழங்கப்படும்: ராஜ்நாத் சிங். வட கிழக்கு மாநிலங்களில் சட்டத்துக்குப் புறம்பாக குடியேறுபவர்களை நாங்கள் தடுத்து நிறுத்துவோம். பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தை நாங்கள் அமல்படுத்தி, 60 வயதுக்கு மேல் இருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் கொடுப்பதை உறுதி செய்வோம்' என்றார்.

தேர்தல் அறிக்கையில், 

-தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து விரைவாக ராமர் கோயில் கட்ட முயற்சி.
-அரசியலமைப்பு சட்டத் திருத்தம் மூலம் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படும்.
-சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும்.
-வட்டி இல்லாமல் 1 லட்சம் ரூபாய் வரை குறுகிய கால விவசாயக் கடன் அளிக்கப்படும்.
-வட கிழக்கு மாநிலங்களில் சட்டத்துக்குப் புறம்பாக குடியேறுபவர்களை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்
-இந்தியாவின் 75 ஆண்டு கால சுதந்திரத்தைப் போற்றும் வகையில் 75 வாக்குறுதிகள் பாஜக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன
-2022 ஆம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் வீட்டு கட்டி கொடுக்கப்படும். 

-நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் உருவாக்கப்படும்.
-‘நல் சே ஜல்' திட்டத்திற்குக் கீழ் 2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் தண்ணீர் இணைப்பு வழங்கப்படும்
-சமஸ்கிரதத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் பள்ளிகள் அளவில் கற்பித்தல் அதிகரிக்கப்படும்.
-அனைத்து மாநிலங்களுடனும் ஆலோசிக்கப்பட்டு, ஜி.எஸ்.டி வரி நடைமுறை அளிதாக்கப்படும்.

உள்ளிட்ட விஷயங்கள் குறித்து வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 


 

.