This Article is From Dec 29, 2018

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோவையில் உள்ள தனியார் ஆயுர் வேத மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி!

முதுகுவலிக்கு இயற்கை முறையில் சிகிச்சை பெறுவதற்காக அவர் சேர்ந்துள்ளதாகவும், 5 நாட்கள் தங்கி ஆயுர்வேத சிகிச்சை பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளிந்துள்ளன.

கோயம்புத்தூர் கணபதியில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவமனைக்கு ஓ.பி.எஸ் அடிக்கடி செல்வது வழக்கம் தான் எனவும், பெரியளவில் பிரச்னை எதுவுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே கோவையில் உள்ள ஆயுர் வைத்திய சாலையில் மூலிகை மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். அங்கு கேரள ஆயுர் வேத முறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது முதுகுவலிக்காக கணபதியில் உள்ள இயற்கை வழி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், கோயம்புத்தூர் கணபதி பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

.