This Article is From Oct 05, 2018

முதல்வர் நாற்காலியில் அமர ‘டபுள் கேம்‘ ஆடுகிறார் ஓ.பி.எஸ். - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

கடந்த வாரம் தன்னை சந்திக்க ஓ.பி.எஸ். முயன்றதாக தினகரன் கூறியுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

முதல்வர் நாற்காலியில் அமர ‘டபுள் கேம்‘ ஆடுகிறார் ஓ.பி.எஸ். - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

‘தர்ம யுத்தம்’ நடத்தியதற்காக ஓ.பி.எஸ். வருத்தம் தெரிவித்ததாக கூறுகிறார் டி.டி.வி. தினகரன்

Chennai:

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட அக்கட்சியின் முன்னாள் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அவருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகி

யோருக்கும் இடையே சமீப காலமாக கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றனர். 
இந்த நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச் செல்வன், தினகரனை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து எடப்பாடி பழனிசாமியை பதவியில் இருந்து நீக்க உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக கூறினார். அவரது பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், ஓ.பி.எஸ். விவகாரம் குறித்து தினகரனே நேரடியாக பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “ கடந்த ஆண்டு ஓ.பன்னீர் செல்வம் என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினார். கடந்த வாரமும்

என்னை சந்திப்பதற்காக அனுமதி கேட்டார். கடந்த ஆண்டு நடந்த சந்திப்பின்போது, தான் நடத்திய ‘தர்ம யுத்தத்திற்காக’ என்னிடம் ஓ.பி.எஸ். வருத்தம் தெரிவித்தார். கடந்த வாரம் எனக்கு தகவல் அனுப்பிய ஓ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக என்னுடன் சேர்வதாக கூறினார்.  இந்த தகவலையெல்லாம் இப்போது எனக்கு சொல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால், ஓ.பி.எஸ். டபுள் கேம் ஆடுகிறார். ஒரே நேரத்தில் அவர் முதல்வர் ஆவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். அதே நேரம் மேடைகளில் எங்களை கடுமையாக குற்றம் சொல்லி பேசுகிறார். இதனால்தான் இந்த தகவலை எல்லாம் மக்கள் முன்னிலையில் கூறுகிறேன்” என்றார்


சசிகலா குடும்பத்துக்கு ஆரம்பம் முதலே தமிழகத்தின் துணை முதல்வராக இருக்கும் ஓ.பி.எஸ், நெருக்கமாக இருந்தாலும், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அனைத்தும் மாறியது. சசிகலாவுக்கு எதிராக பத்திரிகையாளர்களிடம் புகார் கூறிய அவர், ‘தர்ம யுத்தத்தையும்’ ஆரம்பித்தார். இதையடுத்து, அவர் தலைமையில் அதிமுக-வின், தனி அணி ஒன்று உருவானது. அப்போது எடப்பாடி பழனிசாமி, சசிகலாவுக்கு ஆதரவாக இருந்தார். அவரும் சில நாட்களில் சசிகலாவுக்கு எதிராக காய் நகர்த்தி, தனியாக பிரிந்து சென்றார். இதையடுத்து ஓ.பி.எஸ்-ஸும், ஈ.பி.எஸ்-ஸும் ஒன்றாக சேர்ந்தனர்.
சசிகலா தலைமையிலான அதிமுக அணி, தனித்து விடப்பட்டது.

பன்னீர் செல்வம், எடப்பாடி அணியுடன் சேரும் போது, ‘சசிகலா, கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்ற கோரிக்கைகளை முன் வைத்தார். இதையடுத்து அவருக்கு கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவியும், ஆட்சியில் துணை முதல்வர் பதவியும் தரப்பட்டது. ஆனால், கட்சியிலும் ஆட்சியிலும் ஓ.பி.எஸ் தொடர்ந்து ஓரங்கப்பட்டப்பட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.


18 சட்டமன்ற உறுப்பினர்களை, சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு சீக்கிரமே அறிவிக்கப்பட உள்ளது. அதில் தினகரனுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துவிட்டால், ஆட்சி கவிழ வாய்ப்புள்ளது. குறிப்பாக ஓ.பி.எஸ், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டால், தமிழக அரசு நிச்சயம் கவிழ்ந்துவிடும்.

.