This Article is From Jan 21, 2019

அதிமுகவில் மட்டுமே சாதாரண தொண்டன் கூட முதல்வராக வரமுடியும்: எடப்பாடி பேச்சு

அதிமுகவில் மட்டுமே சாதாரண தொண்டன் கூட முதல்வராக வரமுடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Posted by

மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கட்சியில் தான் சாதாரண தொண்டன் கூட எம்எல்ஏவாக, அமைச்சராக, முதலமைச்சராக கூட வரமுடியும்.

திமுகவில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். அவருக்குப் பின்னர் ஸ்டாலின் முதல்வராக துடிக்கிறார். அது எப்போதும் நடக்காது. அவருக்குப் பின்னர் அவரது மகன் உதயநிதி கட்சிக்கு வர துடிக்கிறார்.

ஆனால் நான் விவசாயக்குடும்பத்தை சேர்ந்தவன். எனக்கு அவர்களின் கஷ்டம் தெரியும். மக்கள் வசதியாக வாழவே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இலவச மிக்ஸி, கிரைண்டர் கொடுத்தார். அதிமுக ஆட்சியில் தான் சிறந்த கல்வி வழங்கப்பட்டது.

இன்றைக்கு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், வேண்டுமென்றே அரசை திட்டமிட்டு குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு எந்த திட்டங்களும் நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை.

Advertisement

மத்தியிலும் கூட்டணி ஆட்சியில் இருந்தார்கள். மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தார்கள். ஆனால் தமிழகம் முன்னேறவில்லை. அவர்கள் குடும்பம் மட்டும் முன்னேறியது. திமுக ஒரு குடும்பத்திற்கு தான் சொந்தக் கட்சி. ஆனால் அதிமுக மக்களுக்கு சொந்த கட்சி என்று அவர் கூறினார்.

Advertisement