This Article is From Dec 27, 2018

தமிழக மீனவர்கள் 3000 பேர் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிப்பு!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 3000 பேரை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.

Advertisement
Tamil Nadu Posted by

இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர்கள் சங்க தலைவர் பி.சேசுராஜா கூறும்போது,

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 500 விசைபடகுகளில் நேற்றிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அந்தநேரத்தில், 20 படகுகளில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர்.

மேலும், தமிழக மீனவர்களின் படகுகளை சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர், மீன்பிடி சாதனங்களையும், வலைகளையும் அறுத்து எறிந்தனர். இதனால், மீன்பிடிக்க முடியாமல் மீனவர்கள் கரைக்கு திரும்பினர் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த 11ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement
Advertisement