Coronavirus in Chennai: இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 264 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் நேற்று 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது
- அதில் சென்னையில் மட்டும் 266 பேர் என்பது குறிப்பிடத்தக்கது
- சென்னைதான் தமிழகத்திலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது
Coronavirus in Chennai: தமிழகத்தில் நேற்று 527 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 266 பேர். ஒட்டுமொத்த அளவில் 3,550 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 30 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 1,409 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 2,107 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (04.05.2020) வருமாறு:
திருவொற்றியூர் - 29
மணலி - 10
மாதவரம் - 24
தண்டையார்பேட்டை - 136
ராயபுரம் - 299
திரு.வி.க நகர் - 357
அம்பத்தூர் - 67
அண்ணா நகர் - 144
தேனாம்பேட்டை - 206
கோடம்பாக்கம் - 257
வளசரவாக்கம் - 114
ஆலந்தூர் - 10
அடையாறு - 44
பெருங்குடி - 12
சோழிங்கநல்லூர் - 10
மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 5
மே 5 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 1,724 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 264 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 18 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 1,437 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சென்னையில் அதிகபட்சமாக திரு.வி.க நகர் மண்டலத்தில் 314 பேருக்கு கொரோனாவுக்கு எதிரான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்தில் 232 பேருக்கும், ராயபுரம் மண்டலத்தில் 213 பேருக்கும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 180 பேருக்கும், அண்ணா நகர் மண்டலத்தில் 118 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது சோதனைகள் மூலம் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.