This Article is From May 07, 2020

சென்னையில் கொரோனா: எங்கு, எவ்வளவு பாதிப்பு? - விரிவான விவரம் (05.05.20)!

Coronavirus in Chennai: மே 6 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 2,008 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
நகரங்கள் Written by

Coronavirus in Chennai: இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 327 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

Highlights

  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,000-ஐ கடந்துள்ளது
  • சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,000-ஐ கடந்துள்ளது
  • தமிழகத்திலேயே சென்னைதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் நேற்று 508 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 279 பேர். ஒட்டுமொத்த அளவில் 4,058 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 76 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 1,485 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 2,537 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (05.05.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 32

Advertisement

மணலி - 13

மாதவரம் - 27

Advertisement

தண்டையார்பேட்டை - 149

ராயபுரம் - 321

Advertisement

திரு.வி.க நகர் - 395

அம்பத்தூர் - 98

Advertisement

அண்ணா நகர் - 169

தேனாம்பேட்டை - 230

Advertisement

கோடம்பாக்கம் - 327

வளசரவாக்கம் - 146

ஆலந்தூர் - 11

 அடையாறு - 53

பெருங்குடி - 15

சோழிங்கநல்லூர் - 13

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 9

மே 6 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 2,008 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 327 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 20 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 1,652 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

Advertisement