This Article is From Jul 01, 2020

சென்னையில் ஒரே நாளில் 2,393 பேருக்கு கொரோனா தொற்று: மண்டலவாரி விவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 34,828 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Written by

சென்னையிலேயே அதிகபட்சமாக அண்ணா நகர் மண்டலத்தில் 3,166 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

Highlights

  • தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது
  • சென்னையில் இதுவரை 55,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
  • தமிழகத்தில் இதுவரை 1,201 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

தமிழகத்தில் நேற்று 3,943 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 2,393 பேர். ஒட்டுமொத்த அளவில் 90,167 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 2,325 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 50,074 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 38,889 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 60 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 1,201 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (01.07.2020) வருமாறு:

Advertisement

திருவொற்றியூர் - 1,062

மணலி - 443

Advertisement

மாதவரம் - 899

தண்டையார்பேட்டை - 1,838

Advertisement

ராயபுரம் - 2,309

திரு.வி.க நகர் - 1,771

Advertisement

அம்பத்தூர் - 1,020

அண்ணா நகர் - 3,166

Advertisement

தேனாம்பேட்டை - 2,051

கோடம்பாக்கம் - 2,322

வளசரவாக்கம் - 1,175

ஆலந்தூர் - 748

 அடையாறு - 1,594

பெருங்குடி - 748

சோழிங்கநல்லூர் - 506

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 906

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 34,828 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 60 சதவீத மீட்பு விகிம் ஆகும். 888 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 22,610 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

சென்னையிலேயே அதிகபட்சமாக அண்ணா நகர் மண்டலத்தில் 3,166 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்திலும், ராயபுரம் மண்டலத்திலும் முறையே 2,322 மற்றும் 2,309 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 443 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 


 

Advertisement