This Article is From Jul 11, 2020

சென்னையில் 74% பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளனர் - ஜூலை 11 மண்டலவாரி நிலவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 55,156 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

சென்னையில் 74% பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளனர் - ஜூலை 11 மண்டலவாரி நிலவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 2,869 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • சென்னையில் 55,156 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளனர்
  • 18,616 பேருக்கொ கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
  • 1,196 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்

தமிழகத்தில் நேற்று 3,250 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,205 பேர். ஒட்டுமொத்த அளவில் 1,30,261 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 4,163 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 82,324 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 46,105 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 64 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 1,829 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (11.07.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 802

மணலி - 377

மாதவரம் - 651

தண்டையார்பேட்டை - 1,464

ராயபுரம் - 1,476

திரு.வி.க நகர் - 1,273

அம்பத்தூர் - 1,125

அண்ணா நகர் - 2,075

தேனாம்பேட்டை - 1,868

கோடம்பாக்கம் - 2,383

வளசரவாக்கம் - 990

ஆலந்தூர் - 551

 அடையாறு - 1,191

பெருங்குடி - 508

சோழிங்கநல்லூர் - 457

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,425

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 55,156 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 74 சதவீத மீட்பு விகிம் ஆகும். 1,196 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 18,616 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 2,869 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,383 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து அண்ணா நகர் மண்டலத்திலும் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்திலும்  முறையே 2,075 மற்றும் 1,868 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 377 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 
 

.