This Article is From Jul 13, 2020

சென்னையில் கொரோனோ: உயரும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை; குறையும் பாதிப்பு எண்ணிக்கை- ஜூலை 13 நிலவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 58,615 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

சென்னையில் கொரோனோ: உயரும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை; குறையும் பாதிப்பு எண்ணிக்கை- ஜூலை 13 நிலவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 1,668 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 76% பேர் மீண்டு வந்துள்ளனர்
  • இதுவரை 1,253 பேர் உயிரிழந்துள்ளார்கள்
  • மணலி மண்டலத்தில் மிகக் குறைவான கொரோனா பாதிப்பு உள்ளது

தமிழகத்தில் நேற்று 4,244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,168 பேர். ஒட்டுமொத்த அளவில் 1,38,470 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 3,617 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 89,532 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 46,969 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 1,966 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (13.07.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 707

மணலி - 294

மாதவரம் - 540

தண்டையார்பேட்டை - 1,331

ராயபுரம் - 1,290

திரு.வி.க நகர் - 1,069

அம்பத்தூர் - 977

அண்ணா நகர் - 1,849

தேனாம்பேட்டை - 1,651

கோடம்பாக்கம் - 2,497

வளசரவாக்கம் - 979

ஆலந்தூர் - 595

 அடையாறு - 1,323

பெருங்குடி - 381

சோழிங்கநல்லூர் - 475

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,511

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 58,615 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 76 சதவீத மீட்பு விகிம் ஆகும். 1,253 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 17,469 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 1,668 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,497 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து அண்ணா நகர் மண்டலத்திலும் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்திலும்  முறையே 1,849 மற்றும் 1,651 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 294 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 


 

.