This Article is From Jul 21, 2020

சென்னையில் மீண்டும் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று: மண்டலவாரியான நிலவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70,651 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Written by

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,977 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

Highlights

  • சென்னையில் 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தினமும் தொற்று ஏற்படுகிறது
  • கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிக ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன
  • மணலி மண்டலத்தில் மிகக் குறைவான கொரோனா பாதிப்பு உள்ளது

தமிழகத்தில் நேற்று 4,985 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,298 பேர். ஒட்டுமொத்த அளவில் 1,75,678 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 3,861 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 1,21,776 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 51,348 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 70 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 2,551 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (21.07.2020) வருமாறு:

Advertisement

திருவொற்றியூர் - 482

மணலி - 230

Advertisement

மாதவரம் - 385

தண்டையார்பேட்டை - 808

Advertisement

ராயபுரம் - 1,002

திரு.வி.க நகர் - 1,114

Advertisement

அம்பத்தூர் - 909

அண்ணா நகர் - 1,629

Advertisement

தேனாம்பேட்டை - 1,250

கோடம்பாக்கம் - 1,977

வளசரவாக்கம் - 725

ஆலந்தூர் - 571

 அடையாறு - 1,167

பெருங்குடி - 394

சோழிங்கநல்லூர் - 408

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 2,076

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70,651 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 81 சதவீத மீட்பு விகிம் ஆகும். 1,456 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 15,127 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 1,269 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,977 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து அண்ணா நகர் மண்டலத்திலும் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்திலும்  முறையே 1,629 மற்றும் 1,250 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 230 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 
 

Advertisement