This Article is From Jul 03, 2020

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா டிஸ்சார்ஜ் விகிதம்: மண்டலவாரி முழு விவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 38,947 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா டிஸ்சார்ஜ் விகிதம்: மண்டலவாரி முழு விவரம்!

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,680 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

ஹைலைட்ஸ்

  • சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 62% பேர் மீண்டு வந்துள்ளனர்
  • தமிழகத்தில் கொரோனா தொற்று 1 லட்சத்தை நெருங்குகிறது
  • பல மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது

தமிழகத்தில் நேற்று 4,343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 2,027 பேர். ஒட்டுமொத்த அளவில் 98,392 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 3,095 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 56,021 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 41,047 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 57 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 1,321 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (03.07.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 1,176

மணலி - 513

மாதவரம் - 920

தண்டையார்பேட்டை - 1,856

ராயபுரம் - 2,239

திரு.வி.க நகர் - 1,832

அம்பத்தூர் - 1,259

அண்ணா நகர் - 2,317

தேனாம்பேட்டை - 1,965

கோடம்பாக்கம் - 2,680

வளசரவாக்கம் - 1,158

ஆலந்தூர் - 872

 அடையாறு - 1,682

பெருங்குடி - 821

சோழிங்கநல்லூர் - 493

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 903

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 38,947 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 62 சதவீத மீட்பு விகிம் ஆகும். 964 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 22,686 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,680 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து ராயபுரம் மண்டலத்திலும் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்திலும் முறையே 2,239 மற்றும் 1,965 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சோழிங்கநல்லூர் மண்டலத்தில் மிகக் குறைவாக 493 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 

.