This Article is From Jul 04, 2020

சென்னையில் 40,000-ஐ தாண்டிய கொரனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கை: மண்டலவாரியாக முழு விவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 40,111 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Written by

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,586 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்

Highlights

  • சென்னையில் நேற்று ஒரே நாளில் 32 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்
  • தமிழகத்தில் இதுவரை 1,385 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்
  • நேற்று மட்டும் தமிழகத்தில் 64 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்

தமிழகத்தில் நேற்று 4,329 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 2,082 பேர். ஒட்டுமொத்த அளவில் 1,02,721 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 2,357 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 58,378 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 42,955 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 64 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 1,385 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (04.07.2020) வருமாறு:

Advertisement

திருவொற்றியூர் - 1,187

மணலி - 530

Advertisement

மாதவரம் - 959

தண்டையார்பேட்டை - 1,984

Advertisement

ராயபுரம் - 2,297

திரு.வி.க நகர் - 1,891

Advertisement

அம்பத்தூர் - 1,288

அண்ணா நகர் - 2,431

Advertisement

தேனாம்பேட்டை - 2,130

கோடம்பாக்கம் - 2,586

வளசரவாக்கம் - 1,228

ஆலந்தூர் - 897

 அடையாறு - 1,793

பெருங்குடி - 867

சோழிங்கநல்லூர் - 554

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 959

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 40,111 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 62 சதவீத மீட்பு விகிம் ஆகும். 996 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 22,686 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,586 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து அண்ணா நகர் மண்டலத்திலும் மற்றும் ராயபுரம் மண்டலத்திலும் முறையே 2,431 மற்றும் 2,297 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 530 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 

Advertisement