This Article is From Jun 01, 2020

ராயபுரத்தில் மட்டும் 3000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு: சென்னை நிலவரம் என்ன?

ஜூன் 1 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 14,802 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Written by

Coronavirus in Chennai: இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7,851 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

Highlights

  • சென்னையிலேயே ராயபுரம் மண்டலம்தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது
  • மணலி மண்டலத்தில் மிகக் குறைவான கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
  • சென்னையில் 122 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்

ராயபுரத்தில் மட்டும் 3000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு: சென்னை நிலவரம் என்ன?

தமிழகத்தில் நேற்று 1,149 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 804 பேர். ஒட்டுமொத்த அளவில் 22,333 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 757 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 12,757 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் தற்போது 9,400 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 13 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 173 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (31.05.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 484

Advertisement

மணலி - 206

மாதவரம் - 364

Advertisement

தண்டையார்ப்பேட்டை - 1,661

ராயபுரம் - 2,737

Advertisement

திரு.வி.க நகர் - 1,556

அம்பத்தூர் - 563

Advertisement

அண்ணா நகர் - 1,237

தேனாம்பேட்டை - 1,662

Advertisement

கோடம்பாக்கம் - 1,798

வளசரவாக்கம் - 871

ஆலந்தூர் - 215

 அடையாறு - 834

பெருங்குடி - 251

சோழிங்கநல்லூர் - 255

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 108

ஜூன் 1 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 14,802 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7,851 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 122 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 6,721 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2,737 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்திலும், தேனாம்பேட்டை மண்டலத்திலும் முறையே 1,798 மற்றும் 1,662 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 206 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

Advertisement