This Article is From Jun 15, 2020

ராயபுரத்தில் 5000, தண்டையார்பேட்டையில் 4000ஐ தாண்டிய கொரனா தொற்று பாதிப்பு: சென்னை நிலவரம் என்ன?

ஜூன் 15 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 31,896 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Written by

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 16,671 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

Highlights

  • தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
  • சென்னையில் ராயபுரம் மண்டலத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
  • மணலி மண்டலத்தில் மிகக் குறைவான கொரோனா பாதிப்பு உள்ளது

தமிழகத்தில் நேற்று 1,974 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,415 பேர். ஒட்டுமொத்த அளவில் 44,661 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,138 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 24,547 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 19,676 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 38 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 435 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (14.06.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 1,171

Advertisement

மணலி - 448

மாதவரம் - 854

Advertisement

தண்டையார்பேட்டை - 4,082

ராயபுரம் - 5,216

Advertisement

திரு.வி.க நகர் - 2,922

அம்பத்தூர் - 1,105

Advertisement

அண்ணா நகர் - 3,150

தேனாம்பேட்டை - 3,844

Advertisement

கோடம்பாக்கம் - 3,409

வளசரவாக்கம் - 1,395

ஆலந்தூர் - 624

 அடையாறு - 1,809

பெருங்குடி - 594

சோழிங்கநல்லூர் - 586

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 687

ஜூன் 15 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 31,896 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 16,671 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 347 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 14,199 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 5,216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை மண்டலத்திலும், தேனாம்பேட்டை மண்டலத்திலும் முறையே 4,082 மற்றும் 3,844 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 448 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

Advertisement