இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 21,098 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- சென்னையில் நேற்று முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது
- தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது
- தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு
தமிழகத்தில் நேற்று 2,115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,322 பேர். ஒட்டுமொத்த அளவில் 54,449 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,630 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 30,271 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 23,509 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 41 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 666 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள்.
சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (19.06.2020) வருமாறு:
திருவொற்றியூர் - 1,434
மணலி - 547
மாதவரம் - 1,046
தண்டையார்பேட்டை - 4,869
ராயபுரம் - 5,981
திரு.வி.க நகர் - 3,356
அம்பத்தூர் - 1,374
அண்ணா நகர் - 3,972
தேனாம்பேட்டை - 4,652
கோடம்பாக்கம் - 4,169
வளசரவாக்கம் - 1,638
ஆலந்தூர் - 808
அடையாறு - 2,204
பெருங்குடி - 762
சோழிங்கநல்லூர் - 723
மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 812
ஜூன் 20 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 38,327 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 21,098 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 529 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 16,699 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 5,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை மண்டலத்திலும், தேனாம்பேட்டை மண்டலத்திலும் முறையே 4,869 மற்றும் 4,652 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 547 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.