This Article is From Jun 24, 2020

சென்னையில் கொரோனா தொற்று: ஜூன் 24 ஆம் தேதி காலை நிலவரம்!

ஜூன் 24 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 44,205 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று: ஜூன் 24 ஆம் தேதி காலை நிலவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24,670 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • சென்னையில் இதுவரை 44,000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு
  • 24,000க்கும் அதிகமானோர் தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளனர்
  • 645 பேர் இதுவரை சென்னையில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்

தமிழகத்தில் நேற்று 2,516 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,380 பேர். ஒட்டுமொத்த அளவில் 64,603 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,227 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 35,339 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 28,428 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 39 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 833 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (23.06.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 1,652

மணலி - 669

மாதவரம் - 1,262

தண்டையார்பேட்டை - 5,355

ராயபுரம் - 6,607

திரு.வி.க நகர் - 3,741

அம்பத்தூர் - 1,644

அண்ணா நகர் - 4,766

தேனாம்பேட்டை - 5,213

கோடம்பாக்கம் - 4,794

வளசரவாக்கம் - 1,880

ஆலந்தூர் - 978

 அடையாறு - 2,684

பெருங்குடி - 899

சோழிங்கநல்லூர் - 860

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,201

ஜூன் 24 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 44,205 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24,670 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 645 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 18,889 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6,607 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை மண்டலத்திலும், தேனாம்பேட்டை மண்டலத்திலும் முறையே 5,355 மற்றும் 5,213 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 669 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 


 

.