This Article is From Jun 29, 2020

சென்னையில் கொரோனா தீவிரம்: ஜூன் 29 ஆம் தேதி காலை நிலவரம் என்ன? - மண்டலவாரி விவரம்

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 31,858 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Written by

இதுவரை சென்னையில் 809 பேர் கொரோனா தொற்றால், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்.

Highlights

  • சென்னையில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது
  • நாளையோடு ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருகிறது
  • மீண்டும் சென்னையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது

தமிழகத்தில் நேற்று 3,940 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,992 பேர். ஒட்டுமொத்த அளவில் 82,275 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,443 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 45,537 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 35,656 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 54 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 1,079 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (26.06.2020) வருமாறு:

Advertisement

திருவொற்றியூர் - 1,053

மணலி - 410

Advertisement

மாதவரம் - 864

தண்டையார்பேட்டை - 1,990

Advertisement

ராயபுரம் - 2,153

திரு.வி.க நகர் - 1,561

Advertisement

அம்பத்தூர் - 879

அண்ணா நகர் - 2,739

Advertisement

தேனாம்பேட்டை - 2,296

கோடம்பாக்கம் - 2,137

வளசரவாக்கம் - 1,009

ஆலந்தூர் - 705

 அடையாறு - 1,377

பெருங்குடி - 517

சோழிங்கநல்லூர் - 537

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 867

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 31,858 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 59 சதவீத மீட்பு விகிம் ஆகும். 809 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 21,094 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

சென்னையிலேயே அதிகபட்சமாக அண்ணா நகர் மண்டலத்தில் 2,739 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து தேனாம்பேட்டை மண்டலத்திலும், ராயபுரம் மண்டலத்திலும் முறையே 2,296 மற்றும் 2,153 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 410 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 
 

Advertisement