This Article is From Jun 30, 2020

சென்னையில் ஒரே நாளில் 2,000 பேருக்கு கொரோனா தொற்று: ஜூன் 30 காலை மண்டலவாரி விவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 33,441 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

சென்னையில் ஒரே நாளில் 2,000 பேருக்கு கொரோனா தொற்று: ஜூன் 30 காலை மண்டலவாரி விவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் 846 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்.

ஹைலைட்ஸ்

  • சென்னையில் 60 கொரோனாவால் பாதிக்கப்பட்ட 60% பேர் மீண்டு வந்துள்ளனர்
  • சென்னையிலேயே அண்ணா நகர் மண்டலத்தில் அதிக ஆக்டிவ் கேஸ் உள்ளன
  • மணலி மண்டலத்தில் மிகக் குறைவான கொரோனா ஆக்டிவ் கேஸ் உள்ளன

தமிழகத்தில் நேற்று 3,949 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 2,167 பேர். ஒட்டுமொத்த அளவில் 86,224 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 2,212 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 47,749 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 37,331 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 62 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 1,141 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (29.06.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 1,027

மணலி - 410

மாதவரம் - 877

தண்டையார்பேட்டை - 1,770

ராயபுரம் - 2,212

திரு.வி.க நகர் - 1,656

அம்பத்தூர் - 929

அண்ணா நகர் - 2,946

தேனாம்பேட்டை - 2,363

கோடம்பாக்கம் - 2,094

வளசரவாக்கம் - 1,081

ஆலந்தூர் - 764

 அடையாறு - 1,500

பெருங்குடி - 608

சோழிங்கநல்லூர் - 490

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 954

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 33,441 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 60 சதவீத மீட்பு விகிம் ஆகும். 846 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 21,681 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

சென்னையிலேயே அதிகபட்சமாக அண்ணா நகர் மண்டலத்தில் 2,946 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து தேனாம்பேட்டை மண்டலத்திலும், ராயபுரம் மண்டலத்திலும் முறையே 2,363 மற்றும் 2,212 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 410 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 


 

.