இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8,900 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- சென்னையிலேயே ராயபுரம் மண்டலம்தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது
- ராயபுரத்தில் 3000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
- மணலி மண்டலத்தில் மிகக் குறைவான கொரோனா பாதிப்பு உள்ளது
தமிழகத்தில் நேற்று 1,286 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,012 பேர். ஒட்டுமொத்த அளவில் 25,872 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 610 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 14,316 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 11,345 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 208 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள்.
சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (03.06.2020) வருமாறு:
திருவொற்றியூர் - 610
மணலி - 246
மாதவரம் - 431
தண்டையார்ப்பேட்டை - 2,093
ராயபுரம் - 3,224
திரு.வி.க நகர் - 1,798
அம்பத்தூர் - 651
அண்ணா நகர் - 1,525
தேனாம்பேட்டை - 2,014
கோடம்பாக்கம் - 2,029
வளசரவாக்கம் - 939
ஆலந்தூர் - 261
அடையாறு - 1,007
பெருங்குடி - 301
சோழிங்கநல்லூர் - 306
மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 163
ஜூன் 4 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 17,598 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8,900 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 139 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 8,396 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 3,224 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை மண்டலத்திலும், கோடம்பாக்கம் மண்டலத்திலும் முறையே 2,093 மற்றும் 2,029 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 246 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.