கொரோனா பாதிப்புக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 19 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 1,146 பேர் என்பது இன்னொரு அதிர்ச்சியளிக்கும் தகவல். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16 ஆயிரத்து 22 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை நேற்று தெரிவித்திருந்தது.
கொரோனா பாதிப்புகளை கண்டறிவதற்காக தமிழகத்தில் 44 அரசு மற்றும் 30 தனியார் என மொத்தம் 74 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (06.06.2020) வருமாறு:
திருவொற்றியூர் - 784
மணலி - 312
மாதவரம் - 579
தண்டையார்ப்பேட்டை - 2,646
ராயபுரம் - 3,717
திரு.வி.க நகர் – 2,073
அம்பத்தூர் - 773
அண்ணா நகர் - 1,864
தேனாம்பேட்டை - 2,374
கோடம்பாக்கம் - 2,323
வளசரவாக்கம் – 1,043
ஆலந்தூர் - 364
அடையாறு - 1,158
பெருங்குடி - 389
சோழிங்கநல்லூர் - 366
மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 228
ஜூன் 7 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 20,993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10,502 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். 197 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 10,066 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 3,717 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை மண்டலத்திலும், தேனாம்பேட்டை மண்டலத்திலும் முறையே 2,646 மற்றும் 2,374 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 312 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.