This Article is From May 16, 2020

சென்னையில் 6000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு; மண்டல வாரியாக என்ன நிலவரம்?

Covid-19 in Chennai: மே 16 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 5,946 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 6000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு; மண்டல வாரியாக என்ன நிலவரம்?

Covid-19 in Chennai: தமிழகத்தில் நேற்று மட்டும் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்

ஹைலைட்ஸ்

  • சென்னையில் ராயபுரத்தில் அதிகபட்சமாக 1,047 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • ராயபுரத்தைத் தொடர்ந்து திரு.வி.க நகரில் 737 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • மிகக் குறைவாக ஆலந்தூர் மண்டலத்தில் 71 பேருக்கு கொரோனா பாதிப்பு

Covid-19 in Chennai: தமிழகத்தில் நேற்று 434 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 309 பேர். ஒட்டுமொத்த அளவில் 10,108 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 359 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 2,599 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 7,435 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 71 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (15.05.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 133

மணலி - 79

மாதவரம் - 92

தண்டையார்ப்பேட்டை - 474

ராயபுரம் - 1047

திரு.வி.க நகர் - 737

அம்பத்தூர் - 285

அண்ணா நகர் - 493

தேனாம்பேட்டை - 640

கோடம்பாக்கம் - 919

வளசரவாக்கம் - 483

ஆலந்தூர் - 71

 அடையாறு - 316

பெருங்குடி - 77

சோழிங்கநல்லூர் - 74

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 26

மே 16 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 5,946 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1071 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 48 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 4,801 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

.