This Article is From May 29, 2020

சென்னையில் 6 மண்டலங்களில் 1000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு - விரிவான நிலவரம்!

Coronavirus in Chennai: மே 29 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 12,762 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 6 மண்டலங்களில் 1000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு - விரிவான நிலவரம்!

Coronavirus in Chennai: இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6,330 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்ழ
  • சென்னையில் ராயபுரம் மண்டலத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
  • மணலி மண்டலத்தில் மிகக் குறைவான கொரோனா பாதிப்பு உள்ளது

Coronavirus in Chennai: தமிழகத்தில் நேற்று 827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 559 பேர். ஒட்டுமொத்த அளவில் 19,372 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 639 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 10,548 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் தற்போது 8,676 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 145 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (28.05.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 377

மணலி - 175

மாதவரம் - 280

தண்டையார்ப்பேட்டை - 1,322

ராயபுரம் - 2,324

திரு.வி.க நகர் - 1,393

அம்பத்தூர் - 516

அண்ணா நகர் - 1,089

தேனாம்பேட்டை - 1,412

கோடம்பாக்கம் - 1,646

வளசரவாக்கம் - 794

ஆலந்தூர் - 178

 அடையாறு - 719

பெருங்குடி - 217

சோழிங்கநல்லூர் - 219

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 101

மே 29 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 12,762 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6,330 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 102 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 6,229 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2,324 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்திலும், தேனாம்பேட்டை மண்டலத்திலும் முறையே 1,646 மற்றும் 1,412 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 175 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 


 

.