This Article is From Aug 29, 2018

'ஸ்டண்ட்' செய்து வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் - திடுக்கிடும் வீடியோ

திடுக்கிட வைக்கும் இந்த வீடியோ பதிவினால், வெள்ள நீர் சூழ்ந்துள்ள சாலைகள் கடப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது

Uttarakhand:

கடந்த ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதி முதல், உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. மேலும், ராம்நகர் நதியில் இருந்து நீர் வெளியேறியதால், சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், தண்ணீர் கரைப்புரண்டு ஓடும் சாலையை கடக்க முயன்ற இளைஞர் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது

இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், வெள்ளம் சூழ்ந்த சாலையை கடக்க நினைத்து ஸ்டண்ட் செய்ய முயற்சிக்கிறார். நொடி பொழுதில், வாகனம் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுகிறது. எனினும், அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய இளைஞரை, ஊர் மக்கள் காப்பாற்றியுள்ளனர். திடுக்கிட வைக்கும் இந்த வீடியோ பதிவினால், வெள்ள நீர் சூழ்ந்துள்ள சாலைகள் கடப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது

கடந்த 15 நாட்களாக உத்தரகண்டில் கனமழை பெய்து வரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
 

.