This Article is From Jan 30, 2019

''சமூக வலைதளங்கள் மூலம் காஷ்மீர் இளைஞர்களை பாக். தீவிரவாதிகளாக மாற்றுகிறது''

தவறான தகவல்களை காஷ்மீர் இளைஞர்கள் மத்தியில் பாகிஸ்தான் பரப்புவதாக காஷ்மீர் டிஜிபி கூறியுள்ளார்.

''சமூக வலைதளங்கள் மூலம் காஷ்மீர் இளைஞர்களை பாக். தீவிரவாதிகளாக மாற்றுகிறது''

காஷ்மீரில் தீவிரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து பரப்பி வருவதாக போலீசார் கூறுகின்றனர்.

Jammu:

சமூக வலைதளங்களை பயன்படுத்தி காஷ்மீர் இளைஞர்களை பாகிஸ்தான் தீவிரவாதிகளாக மாற்றி வருவதாக அம்மாநில டிஜிபி தில்பாக் சிங் கற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

இந்தியாவுக்கு எதிராக மறைமுக போரை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களை பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்துகிறது. 

சமூக வலைதளங்களில் இந்தியாவுக்கு எதிரான தவறான தகவல்களை காஷ்மீர் இளைஞர்கள் மத்தியில் பாகிஸ்தான் பரப்பி வருகிறது. இதனால் அவர்கள் தீவிரவாதிகளாக மாறுகின்றனர். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

.