Lucknow :
துபாயிலிருந்து லக்னோ வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், திடீரென ஒரு பயணி நடுவானில் தனது ஆடைகளை களைந்து நிர்வாணமானார். யாரும் எதிர்பாராத நேரத்தில் இப்படி செய்து அங்குள்ளவர்களை அதிர்ச்சியடைய செய்தார்.
பின்னர் அங்குள்ள கேபின் குழுவை சேர்ந்தவர்கள் அவரை கம்பளியால் போர்த்தி அமைதியாக உட்கார வைத்தனர்.
மேலும் இரண்டு பேர் அவரை நகர விடாமல் பார்த்துக் கொண்டனர். பின்னர் பயணிகளை பாதுகாத்து விமானம் பயானித்தது.
பயணியின் இந்தச் செயலுக்கான காரணம் கூறப்படவில்லை. 150 பயணிகளுடன் IX-194 பயணித்தது.
Advertisement
12:05க்கு லக்னோவில் பயணியை லக்னோ காவல்துறையிடம் ஒப்படைத்து, பின்னர் 14:05க்கு மீண்டும் துபாய்க்கு புறப்பட்டது.
COMMENTS
Advertisement