Read in English
This Article is From Oct 09, 2018

டிராக்டர் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து! - நோயாளி உட்பட 3 பேர் பலி!

சாபல்கார்க்கிலிருந்து குவாலியர் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ், முகுந்தா கிராமத்திற்கு அருகில் சென்றபோது, ரோட்டோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் மீது மோதியது.

Advertisement
இந்தியா

நோயாளியின் குடும்பத்தினர் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

Morena:

நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது ஆம்புலன்ஸ் மோதியதில், நோயாளி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர் என்று மத்தியபிரதேச போலீசார் தெரிவித்தனர்.

சாபல்கார்க்கிலிருந்து குவாலியர் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ், முகுந்தா கிராமத்திற்கு அருகில் சென்றபோது, ரோட்டோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் மீது மோதியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நோயாளியான ராம்பாபு தாக்கட்(47) ஆம்புலன்ஸில் மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருடன் இருந்த அவரது தாய் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

இதில் நோயாளியின் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 4 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


 

Advertisement