This Article is From Apr 11, 2020

3வது கட்டத்திற்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி மக்களிடமே உள்ளது: ஜெயக்குமார்

ஊரடங்கை மீறியதாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 46 லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதம் பெறப்பட்டுள்ளது.

3வது கட்டத்திற்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி மக்களிடமே உள்ளது: ஜெயக்குமார்

3வது கட்டத்திற்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி மக்களிடமே உள்ளது: ஜெயக்குமார்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே 3-வது கட்டத்துக்குச் செல்லாமல் தடுக்க முடியும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, சென்னையில் இதுவரை 12,400 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர். 

மேலும் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 67 பகுதிகள் தனிமை பகுதிகளாக அறிவிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளன

கும்பல் சேரக்கூடாது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அம்மா உணவகத்திலும் அது கடைப்பிடிக்கப்படுகிறது. எவ்வளவு பேர் வந்தாலும் அவர்களுக்கு உணவு வழங்கப்படும். அதற்கான உணவுப்பொருட்கள் இங்கு உண்டு.

நாம் இரண்டாம் கட்டத்திற்குச் சென்று விட்டோம். மூன்றாம் கட்டத்திற்குச் செல்லக் கூடாது. மூன்றாம் கட்டத்திற்குச் செல்லாமல் இருக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

ஊரடங்கை மீறியதாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 46 லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதம் பெறப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் மூன்றாம் கட்டத்திற்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி மக்களிடமே உள்ளது. மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

.