2019 மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குபதிவு இன்று நடக்கிறது. 91 தொகுதிகள் இன்று தேர்தலை சந்திக்கிறது. மத்திய அமைச்சர்களான நிதின் கட்காரி (நாக்பூர்), கிரேன் ரிஜிஜு (அருணாச்சல் மேற்கு), ஜெனரல் விகே.சிங் (கசியாபாத்), சத்யபால் சிங் (பாக்பாத்), மகேஷ் சர்மா (கவுதம் புத்தா நகர்) ஆகியோர் இன்று வேட்பாளர்களாக களமிறங்குகிறார்கள்
ஆந்திரா, அருணாச்சல் பிரதேசம், அசாம், பிகார், ஜம்மு மற்றும் காஷ்மீர், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஒடிசா, சிக்கிம், திர்புரா, உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சத்தீஸ்கர், உத்திரகண்ட், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இன்று வாக்குபதிவு நடக்கவிருக்கிறது.
உத்திர பிரதேசத்தில் இருக்கும் 80 தொகுதிகளில் முதல் கட்டமாக 8 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இதில் முக்கிய தொகுதிகள் சகரண்பூர், கைரானா, கசியாபாத், பாக்பாத் மற்றும் கவுதம் புத்தா நகர் ஆகும். பாஜக, காங்கிரஸ், மாயாவதி – அகிலேஷ் யாதவ் – அஜித் சிங் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.