This Article is From Aug 19, 2020

பி.எம் கேர்ஸ் நிதியில் சீன நிறுவனங்களை இணைத்துள்ளீர்களா? ப.சிதம்பரம் கேள்வி

PM-CARES Fund: பி.எம் கேர்ஸ் நிதியில் சீன நிறுவனங்களை இணைத்துள்ளீர்களா? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

பி.எம் கேர்ஸ் நிதியில் சீன நிறுவனங்களை இணைத்துள்ளீர்களா? ப.சிதம்பரம் கேள்வி

பி.எம் கேர்ஸ் நிதியில் சீன நிறுவனங்களை இணைத்துள்ளீர்களா? ப.சிதம்பரம் கேள்வி

New Delhi:

பி.எம் கேர்ஸ் நிதியில் சீன நிறுவனங்களை இணைத்துள்ளீர்களா? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்காக சேகரிக்கப்பட்ட பி.எம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்ற முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், பி.எம்.கேர்ஸ் நிதியால் சேகரிக்கப்பட்ட நிதி முற்றிலும் வேறுபட்டது, இந்த நிதிகள் தொண்டு அறக்கட்டளையின் நிதிகள் ஆகும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

அதில், பி.எம் கேர்ஸ் நிதியில் சேகரிக்கப்பட்ட நிதி அறக்கட்டளைக்குரியது என்பதைக் உறுதிப்படுத்தி உள்ளோம். ஆகவே கொரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக புதிய தேசிய பேரிடர் திட்டம் ஏதும் தேவையில்லை. 

என்.டி.ஆர்.எஃப் க்கு வழங்கப்படும் பங்களிப்புகளுக்கு சட்டரீதியான தடை இல்லை. பி.எம்.கேர்ஸ் நிதிக்கான பங்களிப்புகள் தன்னார்வமானவை. மேலும், மேலும், பி.எம்.கேர்ஸ் நிதியால் சேகரிக்கப்பட்ட நிதி முற்றிலும் வேறுபட்டது, இந்த நிதிகள் தொண்டு அறக்கட்டளையின் நிதிகள் ஆகும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், பி.எம் கேர்ஸ் நிதியில் சீன நிறுவனங்களை இணைத்துள்ளீர்களா? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக அவரது டிவிட்டர் பதிவில் கூறியதாவது, பி.எம்.கேர்ஸ் நிதியின் சட்டப்பூர்வத்தையும், சட்டப்பொறுப்பு குறித்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானது. ஆனால், அறிவார்ந்தவர்கள், கல்வி வட்டாரங்களில் பி.எம்.கேர்ஸ் குறித்த பல்வேறு கேள்விகள் நீண்டகாலத்துக்கு எழுப்பப்படும்.

பி.எம்.கேர்ஸ் நிதிக்கு யார் நன்கொடை அளித்துள்ளார்கள்? 2020 மார்ச் மாதத்துக்குள் ரூ.3,076 கோடி நிதி யார் கொடுத்தது?. சீன நிறுவனங்களை அதில் இணைத்துள்ளீர்களா? ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து எவ்வளவு பணம் பெற்றுள்ளீர்கள்? யாரெல்லாம் நன்கொடை அளித்துள்ளர்கள்?

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து எந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஏனென்றால், பி.எம்.கேர்ஸ் நிதியின் உண்மைத்தன்மை, வெளிப்படைத்தன்மை, நிர்வாகச்செயல்பாடுகள் ஆகியவை குறித்து நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிடவில்லை. ஆர்.டி.ஐ விசாரணைக்கு அப்பாற்பட்டதாக இந்த நிதி இருந்தால், இந்த கேள்விகளுக்கு யார் பதில் அளிப்பது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

.