This Article is From Mar 09, 2019

''மோடிதான் இந்தியாவின் டாடி'' - அதிமுக அமைச்சர் பேச்சால் பரபரப்பு

மோடி குறித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பிரதமர் மோடியை பாராட்டி பேசியுள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Written by

கருணாநிதி மரியாதைக்குரிய தலைவர் என்று ராஜேந்திர பாலாஜி பேசினார்.

Highlights

  • அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மோடி குறித்து பேசியுள்ளார்
  • கருணாநிதி மரியாதைக்குரிய தலைவர் என்று கூறியுள்ளார் ராஜேந்திர பாலாஜி
  • தமிழகத்தில் நலத்திட்டங்கள் மோடியால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன:ராஜேந்திர பாலாஜி

''மோடிதான் இந்தியாவின் டாடி'' என்று தமிழக பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது-

ரஃபேல் போர் விமான புகார்கள் யூகத்தின் அடிப்படையில் பேசப்படுகிறது. இதற்கு ஆதாரங்கள் இல்லை. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் வைத்ததை போன்று எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதியின் பெயர் வைக்க வேண்டும் என்று அழகிரி கோரிக்கை வைத்துள்ளார். 

இந்த விவகாரத்தில் எங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை. கருணாநிதி மரியாதைக்குரிய தலைவர். கடந்த 40 நாட்களில் பிரதமர் மோடி 4 முறை தமிழகம் வந்து நலத்திட்டங்களை ஆரம்பித்தார். 

Advertisement

தமிழகத்தில் மதவாதத்திற்கும், பிரிவினைக்கும் இடம் இல்லை. ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாத இடத்தில், 'மோடிதான்  எங்களுக்கு டாடி', 'இந்தியாவின் டாடி'.
இவ்வாறு ராஜேந்திர பாலாஜி கூறினார். 

Advertisement