Read in English
This Article is From Sep 18, 2018

மோடி பிறந்தநாள்: 550 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அறிவிப்பு

தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் உள்ள நரூரில் பள்ளி மாணவ, மாணவிகளை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்

Advertisement
இந்தியா
Varanasi:

பிரதமர் நரேந்திர மோடி, அவரது 68வது பிறந்த நாளை நேற்று வாரணாசியில் கொண்டாடினார். மேலும், 550 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறுத் திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது, வாரணாசியில் முன்னேற்றம் கொண்டு வரவேண்டும் என்பதே எங்களின் ஆசை. இதனால் இங்கு அரசு நன்றாக செயல்பட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறது. கடந்த ஆட்சியாளர்கள் வாரணாசிக்கு எதுவும் செய்யவில்லை. தற்போது சுற்றுவட்டச்சாலை அமைக்கப்படுகிறது என்றார்

மேலும், சாலை, விமானம், இரயில் வழிகளில், அனைத்து நகரங்களும் இணைக்கப்படும். மருத்துவ மையம், விளையாட்டு மைதானம் அமைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் உள்ள நரூரில் பள்ளி மாணவ, மாணவிகளை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, மாணவர்கள் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்

Advertisement
Advertisement