This Article is From Jun 24, 2018

'மன் கி பாத்' 45வது பதிப்பில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு

இந்தி மொழி ஒலிபரப்பிற்கு பின்னர், நாடு முழுவதும் உள்ள பிராந்திய மொழிகளில் ஒலிபரப்பு செய்ய உள்ளனர்

'மன் கி பாத்' 45வது பதிப்பில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு
புதுடில்லி: ஜூன் 24: 'மன் கி பாத்' 45வது பதிப்பில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு மக்களுடன் கருத்துக்களை பகிர உள்ளார்.

இந்த நிகழ்ச்சி அனைத்திந்திய வானொலி வலையிலும், தூர்தர்ஷனிலும் ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. மேலும், பிரமர் அலுவலகம், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் யூ-ட்யூப் சேனல்களிலும் ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, www.allindiaradio.gov.in. இணையதளத்திலும் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தி மொழி ஒலிபரப்பிற்கு பின்னர், நாடு முழுவதும் உள்ள பிராந்திய மொழிகளில் ஒலிபரப்பு செய்ய உள்ளனர். பிராந்திய மொழியில் வெளியாகும் நிகழ்ச்சி இரவு எட்டு மணிக்கு மீண்டும் மறுஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.

முன்னதாக, மன் கி பாத்தின் நிகழ்ச்சிக்கு கிடைக்கும் பின்னூட்டங்கள் இந்த தளத்தை மேலும் முன்னேற்ற உதவியாக இருந்தது என தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டிருந்தார்.
.